ரஃபிஸி ரம்லி பதவி விலகல், அன்வார் கருத்துரைக்க மறுப்பு

கோலாலம்பூர், மே.28-

பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி பதவி விலகல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

தமது பதவி விலகல் குறித்து ரஃபிஸி ரம்லி, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் டத்தோஸ்ரீ அன்வாரை அணுகி செய்தியாளர்கள் வினவிய போது, ரஃபிஸி ரம்லி பதவி விலகியதாக யார் சொன்னார்கள் என்று அன்வார் வினவினார்.

பதவி விலகுவதாக அறிவித்துள்ள ரஃபிஸி ரம்லியின் பதவி துறப்பு, வரும் ஜுன் 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

WATCH OUR LATEST NEWS