நஜீப்பின் முதன்மை வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கோலாலம்பூர், மே.30-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் முதன்மை வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சட்டத்துறை அலுவலகம் தொடுக்கவிருகிறது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை ஜெர்மனியின் நாஜிக்களுடன் ஒப்பீடு செய்து ஷாஃபி பேசியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

ஷாஃபியின் குற்றச்சாட்டும், ஒப்பீடும் கடுமை வாய்ந்தது. மலேசியாவில் நீதித்துறையில் சுதந்திரம் இல்லை என்பது போலவும், அதன் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகிவிட்டது போலவும் ஷாஃபியின் குற்றச்சாட்டு அமைந்துள்ளது என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS