தொடர்புத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள மலேசியா – இந்தோனேசியா தயார்

தோக்யோ, மே.31-

தொடர்புத்துறை, ஊடகத்துறை மற்றும் இலக்கவியல் துறை ஆகியவற்றில் மலேசியாவும், இந்தோனேசியாவும் தங்களுக்கு இடையில் இரு வழி ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.

மலேசிய தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீலுக்கும், இந்தோனேசியத் தொடர்புத்துறை அமைச்சர் மியூத்யா வியாடா ஹாஃபிட்டுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தக் கூட்டு ஒத்துழைப்புக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஜப்பான், தலைநகர் தோக்யோவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களுக்கானக் கூட்டத்திற்கு அப்பாற்றபட்ட நிலையில் இரு நாடுகளின் அமைச்சர்களும் சந்தித்துக்.

மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவிற்கும், இந்தோனேசிய தேசிய செய்தி நிறுவனமான அந்தாராவிற்கும் இடையில் வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளுக்கு முதலில் உடன்பாடு கண்டு இருப்பது, இணக்கம் காணப்பட்டுள்ள விவகாரங்களில் அடங்கும் என்று இன்று தனது முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில் டத்தோ பாஃமி பாஃட்சீல் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS