ஆச்சேவில் நீரில் மூழ்கி மலேசியர் உயிரிழந்தார்

கோலாலம்பூர், ஜூன்.01-

இந்தோனேசியா, ஆச்சே, கோத்தா சாபாங் கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்டிருந்த மலேசியர் ஒருவர், நீரில் மூழ்கி மரணமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடந்தது.

இதர இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு நீச்சல் பயிற்றுநர் ஆகியோருடன் 33 வயதுடைய அந்த மலேசியர் நீச்சல் மற்றும் முக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளையில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை இந்தோனேசியப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS