இராணுவப் பெண் அதிகாரியால் மோதப்பட்டு, மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

குவாந்தான், ஜூன்.02-

இராணுவப் பெண் அதிகாரி செலுத்திய வாகனத்தால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கிழக்குக் கரை நெடுஞ்சாலையான எல்பிடி ஒன்றில், 195.2 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

சிலாங்கூர், அம்பாங், கம்போங் டத்தோ முஃப்டி சுயிப் என்ற இடத்தைச் சேர்ந்த 49 வயது ஸாகுவான் லாதே என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

28 வயது கேட்படன் அந்தஸ்தை கொண்ட இராணு உயர் அதிகாரி ஹோண்டா சிட்டி ரகக் காரில் குவாந்தானிலிருந்து மெந்தகாப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் பூசு தெரிவித்தார்.

உயிரிழந்த நபர், மின்சாரக் கடைப் பணியாளர் என்று தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS