கோத்தா பாரு, ஜூன்.02
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 12 பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று முன்னிரவு 12.55 மணியளவில் கிளந்தான், ஜாலான் மாச்சாங்- பாசீர் பூத்தே, கம்போங் பங்கோ ஜூடால் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இதில் 54 வயது நபரும், 12 வயது சிறுவனும் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். இருவரும், இதர நான்கு பெண்களுடன் புரோட்டோன் வாஜா காரில் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். அவர்களின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தினர்.