2 கோடி ரிங்கிட் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது

புத்ராஜெயா, ஜூன்.02-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை ஒன்று நிர்மாணிப்புக்காகப் பெறப்பட்ட பணத்தில் முறைகேடு புரிந்ததாகக் கூறப்படும் டான் ஶ்ரீ ஒருவர் சம்பந்தப்பட்ட விசாரணையில் 2 கோடி ரிங்கிட் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள சாத்தியம் குறித்து தெரிய வந்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் அந்த டான் ஶ்ரீ, சில முதலீடுகளைச் சட்டவிரோதமாகச் செய்துள்ளார். ஏற்கனவே அந்த டான் ஶ்ரீயின் 6 பங்களா வீடுகள் மற்றும் ஒரு நிலம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

அந்த டான் ஶ்ரீக்குச் சொந்தமான மேலும் சொத்துக்கள் உள்ளனவா? என்பது குறித்து எஸ்பிஆர்எம் ஆராய்ந்து வருவதாக அஸாம் பாக்கி கூறினார்.

WATCH OUR LATEST NEWS