கோலாலம்பூர், ஜூன்.02-
மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி, கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை ஜுன் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 4 ஆம் தேதி புதன்கிழமை வரை கொமுட்டர் ரயில் சேவைக்கு அனைத்து டிக்கெட் வகைகளிலும் பயணிகளுக்குப் பாதிக் கட்டணத்தை விதிக்கிறது.
கொமுட்டர் ரயில் சேவையின் சமிக்ஞை அமைப்பு முறையின் தரத்தை உயர்த்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால் ரயில் சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ரயில் தாமதங்களுக்குப் பயணிகளிடம் கேடிஎம்பி, மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் வகையில் நாளை தொடங்கி இரண்டு தினங்களுக்கு 50 விழுக்காடு சலுகைக் கட்டணத்தை வழங்குவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.