மெர்சிங், ஜூன்.03-
பள்ளி விடுமுறை நாளை குதூகலமாகக் கழிப்பதற்காக குடும்பத்தினருடன் கடற்கரைக்குச் சென்ற இரு உடன் பிறப்புகள், நீரில் மூழ்கி உயிரிழந்தது, அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியைச் சோகமாக்கியது.
மெர்சிங், புலாவ் மெந்திகியில், நேற்று திங்கட்கிழமை மாலை 4.25 மணியளவில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 15 வயது பெண் நூர் அவாதிவ் உடைய்மா முகமட் ஹிசாம் மற்றும் அவரின் 13 வயது சகோதரர் அஹ்மாட் உவாய்ஸ் அல் கார்னி ஆகியோரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் அடையாளம் கூறினர்.
இவ்விருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பூலாவ் திங்கி படகுத் துறை வாயிலாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டன. விசாரணைக்கு ஏதுவாக பிரேதங்கள், கடல்சார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.