டான் ஶ்ரீ முகமட் ஷாருல் அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராக நியமனம்

கோலாலம்பூர், ஜூன்.03

தூதரகத் துறையில் பரந்த அனுபவத்தைக் கொண்ட டான் ஶ்ரீ முகமட் ஷாருல் இக்ராம் யாகோப், அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகக் காலியாக இருந்து வந்த அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவி, யார் மூலம் நிரப்பப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் அப்பதவிக்கு டான் ஶ்ரீ முகமட் ஷாருல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முகமட் ஷாருல், நியமனத்தற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளார். பகாங் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவரான முகமட் ஷாருல், கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து தூதரகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற வைபவத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவிக்குரிய நியமனக் கடிதத்தை முகமட் ஷாருலுக்கு வழங்கினார்.

WATCH OUR LATEST NEWS