துன் டாயிமின் 75 கோடி ரிங்கிட் சொத்துக்களை எஸ்பிஆர்எம் முடக்கியது

கோலாலம்பூர், ஜூன்.03-

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற டையிம் ஸைனுடினின் துணைவியார் நாயிமா அப்துல் காலிட் மற்றும் அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான 13 கோடியே 20 லட்சம் பிரிட்டன் பவுண் அல்லது 75 கோடியே 82 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 7 சொத்துக்களையும், ஒரு வங்கிக் கணக்கையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் முடக்கியது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவின் மூலம் அந்தச் சொத்துக்களை முடக்குவதற்கு எஸ்பிஆர்எம்மிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

லண்டனில் உள்ள 3 ஆடம்பர பங்களா வீடுகள், இரண்டு வர்ததகக் கட்டிடங்கள் ஆகியவை எஸ்பிஆர்எம்மினால் முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும்.

துன் டாயிம் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான அந்த அசையா சொத்துக்கள் கொள்முதல் செய்யப்பட்ட முறை, அவை எவ்வாறு வாங்கப்பட்டன என்பதற்கான விளக்கங்களை அளிக்க துன் டாயிம் குடும்பத்தினர் தவறிவிட்டனர். சட்டவிரோதப் பண மாற்றச் சட்டத்தின் மூலம் அந்த சொத்துக்களை எஸ்பிஆர்எம் முடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS