கோலாலம்பூர், ஜூன்.03-
கோலாலம்பூர் பங்சாரில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்ற 25 வயது பிரிட்டிஷ் பிரஜை, மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பில் இருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கூ மஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.
தென்கிழக்காசிய சுற்றுலாப் பயணத்தில் ஒரு பகுதியாக மலேசியாவிற்கு வந்த ஜோர்டான் ஜோன்சன் டோயில் என்ற அந்த பிரிட்டிஷ் பிரஜையின் தந்தை போலீஸ் புகார் அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தனியொரு நபராக மலேசியாவிற்கு வந்த அந்த மென்பொருள் பொறியிலாளர், கடந்த மே 27 ஆம் தேதி பங்சாரில் உள்ள ஐரிஸ் மதுபான விடுதிக்குச் சென்ற போது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வரும் வேளையில் ஆருடம் எதனையும் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு மஷாரிமான் கூ மாஹ்மூட் அறிவுறுத்தியுள்ளார்.