புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடி விபத்து தொழில்நுட்ப அறிக்கை ஜுன் 26 ஆம் தேதி வெளியிடப்படும்

ஷா ஆலாம், ஜூன்.03

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்துச் சம்பவம் தொடர்பிலான தொழில்நுட்ப விசாரணை அறிக்கை இம்மாதம் 26 ஆம் தேதி முழுமையாக வெளியிடப்படும் என்ற சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பலதரப்பட்ட முக்கிய அம்சங்கள் இருப்பதால் குற்றப்புலனாய்வு விசாரணை அறிக்கையுடன் இணைப்பதற்கு இந்த தொழில்நுட்ப விசாரணை அறிக்கை, அவசியமானதாகும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பாக எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன்னதாக கட்டமைப்பு, மண்ணின் நகர்ச்சி உட்பட பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS