கோலாலம்பூர், ஜூன்.03-
இலக்கவியல் அமைச்சு, இலக்கவியல் தரவுப் பகிர்வுக்கான கொள்கையை விரைவில் வெளியிடும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு தரவுப் பகிர்வு சட்டம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததை அடுத்து இந்தக் கொள்கை வெளியிடப்படுகிறது.
தனி மனித தரவு என்பது இரகசியமாகவும், முறையாகவும் பாதுகாக்கப்பட வேண்டியது. இதனைக் கருத்தில் கொண்டு, மக்களின் தரவுகளை நிர்வகிக்க தேசியத் தரவுப் பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.
தனது தலைமையில் இயங்கும் இந்தக் குழுவில், நாட்டிலுள்ள முக்கிய அமைச்சுகளிலிருக்கும் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஆக அந்தந்த அமைச்சுகளின் தரவுகள் முறையாகவும், துல்லியமாகவும் இலகுவாகவும் கையாள இந்த தேசியத் தரவு பகிர்வு ஆணைய குழு வழிகாட்டும். அதன் வழி தரவுப் பகிர்வுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என கோபிந்த் சிங் டியோ கூறினார்.
தேசியத் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பகிரப்படும் தரவு செயல்பாடுகள் அந்ததந்த அமைச்சுக்கேற்ப இலகுவாகவும், பாதுகாப்பானாதாகவும், சட்டத்திட்குட்பட்டதாகவும், முறையானதாகவும் இருப்பதை உறுதிச் செய்ய தேசியத் தரவு பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.