கோலாலம்பூர், ஜூன்.04-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், கடந்த வாரம் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்புத் திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில் டான்ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட பிரமுகர் ஒருவரின் 143 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ஆடம்பரச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 4.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14 தனிப்பட்ட வங்கிக் கணக்குகள், மொத்தம் 33 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிறுவனத்தின் 8 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஒரு சொகுசு கொண்டோமினியம், 24.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு நிலம், 7.65 மில்லியன் மதிப்புள்ள 13 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.
அந்த டான்ஸ்ரீக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.