மனைவியை வெட்டிக் கொலை செய்த ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

தங்காக், ஜூன்.04-

ஜோகூர், தங்காக், புக்கிட் கம்பீர், தாமான் சஹாயாவில் தனது மனைவியை வெட்டிக் கொன்று விட்டு, தனது மாமியார் வீட்டை எரிக்க முயற்சி செய்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ஆடவரைக் கைது செய்வதில் வெற்றி கண்ட போலீசார், அந்நபரை இன்று தங்காக் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் லீ கிம் கியாட் முன்னிலையில் நிறுத்தினர். அவருக்கு 7 நாள் தடுப்புக் காவல் அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

அந்த நபர், தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

கடந்த திங்கட்கிழமை மாலை 4.15 மணியளவில், ஒரு குமாஸ்தாவான 34 வயதுடைய தனது மனைவியை அந்த நபர் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS