கோலாலம்பூர், ஜூன்.04-
கோலாலம்பூர் மாநகரம் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பெய்த கனத்த மழையில் சில இடங்களில் பள்ளிகள் மற்றும் வீடுகளில் கூரைகள் பறந்துள்ளன. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கடும் மழையில் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் நிரம்பியதால் வாகனப் போக்குவரத்து நிலை குத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் காணொளிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கோலாலம்பூர், சுங்கை பீசி தேசியப் பள்ளிகளின் கூரைகள் பறக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.