பாலியல் பலாத்காரம், உள்ளூர் கலைஞர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.04-

17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக உள்ளூர் கலைஞரான பாடகர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் நடிகரும், பாடகருமான அந்த நபரை, போலீசார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

பணியிடத்தில் அறிமுகமான அந்த நடிகருடன், இளம் பெண் அடிக்கடி வெளியே சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகர் கைது செய்யப்பட்டதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் உறுதிச் செய்துள்ளது.

WATCH OUR LATEST NEWS