அனுமதியின்றி பன்றிகளை ஏற்றி வந்த லோரி தடுக்கப்பட்டது

ஈப்போ, ஜூன்.04-

கால்நடை இலாகாவின் அனுமதியின்றி பன்றிகளை இடம் மாற்றம் செய்யும் வகையில் 66 பன்றிகளை ஏற்றிக் கொண்டுச் சென்ற ஒரு லோரி, சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று தடுக்கப்பட்டது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.20 மணியளவில் பேரா, மஞ்சோங், லேகிர் அருகில் மேற்கு கடலோர நெடுஞ்சாலையான WCE-யின் 195.5 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

அந்தப் பன்றிகள் பினாங்கிலிருந்து கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பன்றிகள் இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு அனுமதியில்லை.

அதே வேளையில் அது தொடர்பாக எந்தவொரு விண்ணப்பத்தையும் சம்பந்தப்ட்ட பண்ணையிடமிருந்து தாங்கள் பெறவில்லை என்று பேரா மாநில கால்நடை இலாகாவின் இயக்குநர் டாக்டர் சைஃபுலிஸாம் அப்துல் காடீர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS