மூவார், ஜூன்.05-
ஆடவர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்ததில் கடும் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டார். இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் பாரிட் புவாயா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
தனியொரு நபராக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.
அந்த நபர், கம்போங் தெங்காவிலிருந்து ஜாலான் பாரிட் புவாயாவை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக ரயிஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.