கோத்தா பாரு, ஜூன்.06-
கடந்த மே 13 ஆம் தேதி தெலுக் இந்தான், லங்காப்பில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 எஃப்ஆர்யு போலீஸ்காரர்கள் மரணம் அடைந்தது தொடர்பில் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள லோரியின் உரிமையாளர் நிறுவனம் மீதான விசாரணை அறிக்கை, இம்மாதம் இறுதியில் தயாராகி விடும் என்று சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜேவின் அமலாக்க இயக்குநர் கிஃப்லி மா ஹாசான் தெரிவித்தார்.
போலீஸ்காரர்கள் பயணம் செய்த எஃப்ஆர்யு லோரிக்கும், கற்களை ஏற்றி வந்த லோரிக்கும் இடையிலான இந்த விபத்து தொடர்பில் 2019 ஆம் ஆண்டு தரைமார்க்க போக்குவரத்து சட்டமான அபாட்டின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.