ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஆயர் குரோ, ஜூன்.06-

தனது நண்பரின் தங்கையான ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் புரிந்ததாக மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 21 வயது ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அஹ்மாட் ஸூல் ஃபிகார் ஃபார்ட்ஸில் என்ற அந்த இளைஞர் கடந்த மே 31 ஆம் தேதி இரவு 10 மணியளவில் மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டிக் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த நபர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை 25 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

WATCH OUR LATEST NEWS