தைவான் பிரஜை மரணத்தில் குற்றத்தன்மையில்லை

ஷா ஆலாம், ஜூன்.06-

கடந்த செவ்வாய்க்கிழமை பூசாட் பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தைவான் பிரஜை ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் அந்த தைவான் ஆடரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே வேளையில் அந்த ஆடவரின் இறப்பு, திடீர் மணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த எல்ஆர்டி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவின்படி, ஆடவர் ஒருவர், ரயில் இருப்புப் பாதையில் விழுகிறார். அப்போது அவரை ரயில் மோதித் தள்ளுகிறது என்று அந்த வீடியோ பதிவு சித்தரிக்கிறது.

WATCH OUR LATEST NEWS