கோலாலம்பூர், ஜூன்.06-
நாளை ஜுன் 7 ஆ ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு அரச மலேசிய போலீஸ் படை இன்று ஜுன் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓப் லஞ்சார் சோதனை மேற்கொள்கிறது.
சாலைகளின் வாகனப் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதிச் செய்யும் அதே வேளையில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் போலீஸ் படை இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து புலன் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.