சிலிக்கோன் தீவுடன் தென் பினாங்கிற்கு பாலம்

ஜார்ஜ்டவுன், ஜூன்.06-

சிலிக்கோன் தீவுடன் தென் பினாங்கை இணைப்பதற்கு 380 மீட்டர் நீளம் கொண்ட பாலம் ஒன்று நிர்மாணிக்கப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட பாலம், வரும் 2028 ஆம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சிலிக்கோன் தீவுக்கும், சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் ஷா பாலம் அல்லது இரண்டாவது பினாங்கு பாலத்திற்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வியூகக் கட்டமைப்பு முயற்சியான பான்-ஐலட்ன் லிங்க் 2A திட்டத்தின் ஒது முக்கிய அங்கமாக நான்கு வழித் தடங்களைக் கொண்ட இந்த பாலம் விளங்கும் என்று சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

பாலத்தின் கட்டுமானப் பணிகள் இந்த மாதம் தொடங்கும். இதன் நிர்மாணிப்புப் பணியின் முதல் கட்டம் 2027 ஆம் ஆண்டு மத்தியப் பகுதியில் நிறைவடையும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS