புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.06-
பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், புக்கிட் மிஞாக் தொழில்பேட்டைப் பகுதியில் நிலத்தடி சாக்கடை குழாய் அருகில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் தாங்கள் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப் படை இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெடி சம்பவத்திற்குப் பிறகு லெங்கோக் பெரிண்டுஸ்திரியான் புக்கிட் மிஞாக் 2 வட்டாரத்தில் சூழ்ந்துள்ள காற்றுத் தரத்தின் தன்மையைத் தாங்கள் ஆராய்ந்து வருவதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் குறிப்பிட்டனர்.