கோலாலம்பூர், ஜூன்.06-
முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டையிம் ஸைனுடினுக்குச் சொந்தமான இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்தற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்யும் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பண மாற்றம் சட்டம் 55 அல்லது 56 ஆகியவற்றைப் பயன்படுத்தி, கோலாலம்பூரின் மையப் பகுதியில் உள்ள 60 மாடிகளை கொண்ட அந்த இல்ஹாம் டவரைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பிக்கும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
தங்களுக்குச் சொந்தமான இல்ஹாம் டவர் பறிமுதல் செய்யப்படுவதற்கு டாயிம் ஸைனுடினின் துணைவியார் நயிமா காலிட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.