பெட்ரோனாஸில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

காஜாங், ஜூன்.06-

நாட்டின் தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ் நேஷனல் பெர்ஹாட்டில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டு வருவது, அந்த தேசிய பெட்ரோலிய நிறுவனத்தை மறு சீரமைக்கும் நடவடிக்கையாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள், ஒப்பந்தம் அல்லது குத்தகை அடிப்படையில் வேலை செய்து வந்தவர்கள் ஆவர் நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரவை விரைவில் ஓர் அறிவிப்பை வெளியிடும் என்று பிரதமர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS