4 வயது சிறுவன் மாடியிலிருந்து விழுந்து மரணம்: தாயார் மற்றும் சிற்றப்பா கைது

கோலாலம்பூர், ஜூன்.06-

கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் 30 ஆவது மாடியிலிருந்து 4 வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் தொடர்பில் அந்த சிறுவனின் தாயார் மற்றும் தந்தையின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியர்களான இருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் சிறுவனின் 27 வயது தாயாரும், தந்தையின் 25 வயது தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த சிறுவனின் தந்தை உள்ளூரைச் சேர்ந்தவர். தாயார் இந்தோனேசியப் பெண்மணி ஆவார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS