பாகிஸ்தானும், இந்தியாவும் அமைதிக்கானத் தீர்வை எட்டுவர்

கோலாலம்பூர், ஜூன்.06-

பிராந்திய நிலைத்தன்மை மற்றும் அமைதியை உறுதிச் செய்வதற்கு பாகிஸ்தானும், இந்தியாவும் தற்போது பதற்ற நிலையைத் தணித்து, அமைதி பாதைக்குத் திரும்பி, விரிவான தீர்வை எட்ட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஹஜ்ஜுப் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷாரிஃபிடமிருந்து இன்று தொலைபேசி அழைப்பைப் பெற்ற தாம், மலேசியாவின் விருப்பத்தை அவரிடம் தெரிவித்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் நிலைமை அனுமதிக்கப்படும் பட்சத்தில் ஏற்கனவே திட்டமிட்டு இருந்த மலேசியப் பயணத்தை பாகிஸ்தான் பிரதமர் தொடர வேண்டும் என்று அவரிடம் தாம் வலியுறுத்தியதாக அன்வார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS