புத்ராஜெயா, ஜூன்.07-
தற்போது இணையம் வழி மேற்கொள்ளப்படும் மின்னியல் சிகரெட் மற்றும் வேப் விற்பனைகளைக் கண்காணிக்குமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
மக்களுக்கு, குறிப்பாக இளம் வயதினருக்குத் தீங்கு விளைவிக்கும் பல வகையான வேப் விற்பனை நடவடிக்கைகள் தற்போது இணையம் வழி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் பொருட்டு வேப் விற்பனை குறித்த முழு அறிக்கையை எம்சிஎம்சி மூலம் தனது அமைச்சு தயாரிக்கும் என்று டத்தோ ஃபாமி தெரிவித்தார்.