ஷா ஆலாம், ஜூன்.07-
சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலான, பேரங்காடி முன்புறம், மனைவி வைத்திருந்த தள்ளுவண்டியில் உள்ள பொருட்களை எடுத்துத், தூக்கி எறிந்து, கணவன் வாய்ச் சண்டையில் ஈடுபட்டு ரகளைப் புரியும் காட்சி வெறும் நடிப்பாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கணவன், ஆவேசமாக மனைவியைத் திட்டுவதும், கோபத்தை அடக்க முடியாமல் பொருட்களைத் தூக்கி எறிந்து, மனைவியிடம் எகிறி பாய்வதும், ஆவேசமிக்க கணவனை இருவர் ஓடி வந்து தடுப்பதும் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்தக் காட்சி, பலரின் கவன ஈர்ப்பாக மாறியது.
எனினும் அது உண்மையான சண்டை அல்ல. மாறாக, எஸ்டி ரோஷாம் மார்ட் என்ற பேரங்காடியைப் பிரபலத்தும் நோக்கில் இருவர் நடித்தனர்.
அந்தக் காணொளி, கணவன், மனைவிக்கும் இடையிலான ஒரு சண்டையைப் போல சித்தரிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது என்று அந்த பேரங்காடியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான டத்தோ ரோஷாம் நோர் விளக்கம் அளித்துள்ளார்.