யுஏஃபா நேஷன்ஸ் லீக்: கிண்ணத்தை வென்றது போர்ச்சுகல்

ஜெர்மனி, ஜூன்.09-

யுஏஃபா நேஷன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் போர்ச்சுகல் வாகை சூடியது. இன்று அதிகாலை இறுதியாட்டத்தில் போர்ச்சுகல் பெனல்டி வாய்ப்பின் மூலம் 5க்கு 3 என்ற கோல்களில் ஸ்பெயினை வீழ்த்தியது. ஒரு நாடுகளும் ஆட்டம் முடிவடைந்தும் 2 க்கு 2 என சமநிலையில் இருந்தன.

எனவே வெற்றியாளரை நிர்ணயிக்க பெனல்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 5க்கு 3 என போர்ச்சுகல் வெற்றி பெற்றது. அவ்வாட்டத்தில் கோல் மன்னன் கிரிஸ்டியானோ ரொனால்டோ அனைத்துலக அரங்கில் தனது 138 ஆவது கோலைப் புகுத்தியது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS