ஜோகூரில் 83 வாகனங்கள் பறிமுதல்

ஜோகூர் பாரு, ஜூன்.11-

ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஜோகூர் மாநிலத்தில் 83 வாகனங்களைச் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, பறிமுதல் செய்து இருப்பதாக அதன் மாநில இயக்குநர் அஸ்மில் ஸைனால் தெரிவித்தார்.

7 நாட்களுக்கு நடைபெற்ற இந்தச் சோதனையில் 45 ஆயிரத்து 395 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 66 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தவிர, 9 கார்கள் மற்றும் இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கு தகுதியற்றவை என்று உறுதிச் செய்யப்பட்டதாக அஸ்மில் ஸைனால் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS