ஈப்போ, ஜூன்.12-
கடந்த திங்கட்கிழமை ஜெலி-கெரிக் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் உப்சி பல்லைக்கழகத்தின் 15 மாணவர்கள் உயிரிழந்த கோர பேருந்து விபத்து தொடர்பில் போலீசார் இதுவரையில் 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர், நேற்று இரவு 10.30 மணிக்கு கெரிக் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமட் ஃபிர்டாவுஸ் அப்துல்லா தெரிவித்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் அந்த பேருந்தில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர். பேருந்து உரிமையாளரிடம் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.