சிரம்பான், ஜூன்.12-
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை சமயப்பள்ளி ஒன்றின் 7 மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக அந்தப் பள்ளியின் வார்டன் ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
அத்துடன் இரண்டு பிரம்படித் தண்டனையை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
38 வயது முகமட் கைரி ஃபிட்ரி என்ற அந்த வார்டன், நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொள்வதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த வார்டன் பிடிப்பட்ட தினத்திலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி டத்தின் சுரிதா தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான், ஜெம்போலில் உள்ள ஒரு சமயப் பள்ளியில் 12 க்கும் 13 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்ததாக அந்த வார்டன் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.