கோலாலம்பூர், ஜூன்.12-
அவதூறு, சூதாட்டம், பகடிவதை, ஓன்லைன் மோசடி முதலிய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைச் சமூக வளைத்தங்களிலிருந்து அகற்றுவதற்கு ஃபேஸ்புக், டிக் டாக் மற்றும் யூடியூப் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் நேற்று வரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 518 உள்ளடக்கங்களைத் தங்களின் சமூக வலைத்தளங்களிலிருந்து அவை அகற்றி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கையானது, இவ்வாண்டு சமூக வலைத்தளங்களிலிருந்து அகற்றப்பட்ட ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 473 உள்ளடங்களில் ஒரு பகுதியாகும் என டத்தோ ஃபாமி விளக்கம் அளித்துள்ளார்.