தெமர்லோ, ஜூன்.12-
சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த இரு பெண்களை மோதித் தள்ளி,மரணம் விளைவித்ததாகக் கூறப்படும் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகாங், தெமர்லோவில் நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் வாகனமோட்டியான 38 வயது நபர், கைது செய்யப்பட்டு, இன்று தெமர்லோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹாசான் தெரிவித்தார்.
சிவப்பு நிற சமிக்ஞை விளக்கில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த 18 வயது இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
வாகனமோட்டிக்கு 7 நாள் தடுப்புக் காவல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஏசிபி மஸ்லான் குறிப்பிட்டார்.