துன் மகாதீரின் பயணச் செலவை அரசாங்கம் ஏற்றது

மலாக்கா, ஜூன்.12-

கடந்த மாதம் ஜப்பான், தோக்யோ நகரில் நடைபெற்ற 30 ஆவது நிக்கேய் அனைத்துலக மாநாட்டில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மற்றும் அவர் தலைமையிலான பேராளர்கள் குழுவினர் பங்கேற்பதற்கு முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதற்கான மொத்த செலவினம் 4 லட்சத்து 86 ஆயிரம் ரிங்கிட்டாகும். அதற்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீரித்ததாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

ஜப்பான், தோக்கியோவில் நடைபெற்ற இந்த அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நாட்டின் நான்காவது மற்றும் ஏழாவது பிரதமரான துன் மகாதீர், அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அந்த விண்ணப்பத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் துன் மகாதீர், இத்தகைய விண்ணப்பத்தை செய்வதற்கு உரிமைப் பெற்றுள்ளார். ஆனால், அதனை நடப்பு பிரதமர் மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்பது நிபந்தனையாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS