புத்ராஜெயா, ஜூன்.12-
மனிதவள அமைச்சு 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அடிப்படை முதலுதவி திறன்களில் பயிற்சி அளிக்கும் முயற்சியைத் தொடங்குவதன் மூலம் தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்பைக் காப்பதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்துகிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியானது, மனித வள அமைச்சு, மலேசிய செம்பிறை சங்கம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் முதலிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு வியூக ஒத்துழைப்பின் மூலம் உறுதிச் செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் வேலையிலும் சமூகத்திலும் அவசர நிலைகளை எதிர்கொள்ள தொழிலாளர்களின் தயார் நிலையை வலுப்படுத்துகிறது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், அங்கு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.