பேருந்தில் தொழில்நுட்பக் கோறாறு இல்லை

கோலாலம்பூர், ஜூன்.14-

கடந்த திங்கட்கிழமை கிழக்கு மேற்கு சாலையின் கெரிக் பகுதியில் 15 உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்தில், அந்த பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு இல்லை என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த பேருந்தில் பிரேக் செயலிழந்து விட்டதாக அதன் ஓட்டுநர் கூறிக் கொண்ட போதிலும் அந்த பேருந்தின் இயந்திரப் பகுதியை விரிவாக ஆராய்ந்ததில் அதில் எந்த தொலில்நுட்பக் கோளாற்றையும் கண்டறிய முடியவில்லை என்று புஸ்பாகோம் தெரிவித்துள்ளது.

பேருந்தின் பிரேக் , ஸ்டேரிங், டயர் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக புஸ்பாகோம் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS