கோலாலம்பூர், ஜூன்.14-
நாட்டில் உள்ள தனியார் கல்விக் கூடங்களுக்கு பயிற்சிக்கான லெவிக் கட்டண விலக்களிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த விலக்களிப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தனியார் துறையைச் சேர்ந்த பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, தொழில் பயிற்சிக் கல்லூரி, உயர் கல்விக் கூடங்கள் இதில் அடங்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.