கோலாலம்பூர், ஜூன்.14-
மலேசிய ஊடகவியலாளர் மன்றச் சட்டம் இன்று ஜுன் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வருவது மூலம் மலேசிய ஊடகவியலாளர்களின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைகிறது என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் இன்று கொண்டாடப்பட்ட ஹவானா எனப்படும் 2025 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோ ஃபாமி இதனைத் தெரிவித்தார்.
2025 ஆம் ஊடகவியலாளர் தினத்தில் இந்தச் சட்டம் முதல் முறையாக அமல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.