அலோர் ஸ்டார், ஜூன்.19-
எல்லைப் பகுதியில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் போலீசார் முறியடித்தனர்.
இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் ஒரு கோடியே 80 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இடைக்கால இயக்குநர் துணை கமிஷனர் மாட் ஸானி முகமட் சலாஹுடின் சே அலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டது மூலம் மலேசியா – தாய்லாந்து எல்லையில் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.