ஜகார்த்தா, ஜூன்.27-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் டத்தோஸ்ரீ அன்வார் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.
அண்மையில் கோலாலம்பூரில் மலேசியா ஏற்று நடத்திய ஆசியான் மாநாட்டில் இணக்கம் காணப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் அன்வார் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.