கோலாலம்பூர், ஜூன்.28-
கோலாலம்பூர், ஜாலான் ஸ்தாப்பாக், தாமான் தாசேக் டானாவ் கோத்தா ஏரியில் ஆடவர் ஒருவரின் சடலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலை 8 மணியளயில் அந்த ஏரிப் பூங்காவில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள், ஏரியில் சடலம் மிதப்பதைக் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்தாப்பாக் தீயணைப்பு, மீட்புப் படை நிலையத்தைச் சேர்ந்த 7 வீரர்கள், கயிற்றின் மூலம் அந்த சடலத்தைக் கரைக்கு இழுத்து, ஸ்ரெச்சரின் உதவியுடன் மேலே கொண்டு வந்தனர் என்று அதன் செயலாக்க அதிகாரி ஸுல்கிஃப்லி அப்துல் மாலிக் தெரிவித்தார்.
சடலத்தை மீட்பதில் அவர்கள் 40 நிமிடம் எடுத்துக் கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.