ஜோகூர் பாரு, ஜூன்.30-
மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு, வி.இ.பி எனப்படும் வெளிநாட்டு மோட்டார் வாகன நுழைவு அனுமதி பெர்மிட் விதிமுறை, நாளை ஜுலை முதல் தேதி முழுமையாக அமலுக்கு வருகிறது.
நாளை முதல் தங்கள் வாகனங்களை, வாகன நுழைவு அனுமதி திட்டத்தில் (வி.இ.பி) பதிவு செய்யாத அல்லது செயல்படுத்தாத வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்கு மலேசிய போக்குவரத்துத்துறை சம்மன் அனுப்பவிருக்கிறது.
1987 ஆம் ஆண்டு மலேசிய போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்பு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்து இருந்தார்.