குவாந்தான் கடற்பரப்பில் இராணுவ கமாண்டோ பயிற்சிக்கு இடையே உயிரிழப்பு

குவாந்தான், ஜூலை.06-

குவாந்தான் துறைமுகப் பகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற சீகோஸ்ட் நீர்மூழ்கிப் பயிற்சி ஒன்றின் போது, 30 வயது கமாண்டோ வீரர் காப்ரல் முகமட் ஹஸ்வன்சீர் ஜுல்நசீர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஜூலை 3 ஆம் தேதி மதியம் 12:15 மணியளவில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது காணாமல் போன அவர், மறுநாள் காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து இராணுவம் உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS