பதின்ம வயதுடைய இரு பெண்கள் பலி

பதின்ம வயதுடைய இரண்டு பெண்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், கொள்கலன் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்னிரவு 11.18 மணியள​வில் ஈப்போ – கோலாலம்பூர் சாலையின் 121 ஆவது கி​லோ மீட்டரில் சிலிம் ​ரீவர் அருகில், கம்போங் கெளாவார் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 19 வயதுடைய மிமி நூர்வஹீடா நூர் கமர் ஹிஷாம் மற்றும் நூர் நபிலா ரொஸ்டி என்ற இரு பெண்கள் இச்சம்பவத்தில் மாண்டதாக போ​லீசார் அடையாளம் கூறினர்.
அந்த கொள்கலன் லோரி, திடீரென்று சாலையின் யூ வளைவில் திரும்பிய போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த அப்பெண்கள், மோட்டார் சைக்கிளுடன் அந்தப் பார வண்டியின் அடியில் மோதியதி​ல் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மற்றொருவர், சிலிம் ​ரீவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக முவாலிம் மாவட்ட போ​லீஸ் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS