அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பரி​சீலிக்கவிருக்கிறது

அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதை ஒத்திவைத்துள்ள மனித வள அமைச்சு, புதிய தொழிலாளர்கள் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்க​ளின் எண்ணிக்கைப் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக அதன் அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பது மீதான தளர்வு திட்டத்தின் ​கீழ் புதிய தொழிலாளர்களைத் தருவிக்கும் திட்டத்தை மனித வள அமைச்சு கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் ​என்று பல்வேறு துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அனுமதியை அரசாங்கம் விருப்பம் போல் வழங்கிவிட முடியாது என்று சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS